அரசாங்கம் வலைப்பூக்களையும் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. அதற்குத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008 உதவுகிறது. Intermediary என்ற பிரிவில் வலைப்பூக்கள், Web-Hosting, Internet Service Providers, Search Engines, Online Payment, Auction Sites & Cyber Cafes இவையெல்லாம் Intermediaries! Twitter, Facebook எல்லாம் இண்டெர்மீடியரிஸ் கிடையாதா என்று கொதிக்கிறார்கள் வலையுலக மக்கள்!
Intermediary, இணையத்தில் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி சேமிப்பது, தகவல் பெறுவது, தகவலைப் பரப்புவது இவையெல்லாம் என்கிறது சட்டம். வலைப்பூக்களை இதோடு சேர்த்ததால் இவ்வளவு விவாதங்கள், விமர்சனங்கள்!
வலைப்பதிவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்கிறார்கள். நமக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்! பின்னூட்டங்கள் threatening, abusive, objectionable, defamatory, vulgar, racial ஆக இருந்தால் அதற்கு சட்டரீதியான பொறுப்பேற்க வேண்டியது எழுதியவரின் கடமை!
ஆனால், கூகிள் இதனை விரும்பவில்லை! இணையத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளில் வலைப்பூக்களும் ஒன்று. யாரோ செய்யும் தவறுக்குப் பதிவர்களைப் பொறுப்பாக்குவது நியாயமில்லை என்கிறது பிளாக் சேவையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான கூகிள்!
வலைப்பூக்களைச் சேர்த்தது சரியா?
எனது கருத்தில் சரி. இணையம் வழங்கும் அளவற்ற சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துபவர்கள் எத்தனை சதவிகிதம்? கருத்துக்களை விட்டுவிட்டு எழுதியவரைத் தாக்குவது, ஆபாசப் பின்னூட்டங்கள், படங்கள் இவை ஒழிய வேண்டுமென்றால் கட்டுப்பாடு தேவை! அரசாங்கம் விதிப்பதற்குப் பதிலாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டால் இணையத்தில் யாவரும் நலம்!
Intermediary, இணையத்தில் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி சேமிப்பது, தகவல் பெறுவது, தகவலைப் பரப்புவது இவையெல்லாம் என்கிறது சட்டம். வலைப்பூக்களை இதோடு சேர்த்ததால் இவ்வளவு விவாதங்கள், விமர்சனங்கள்!
வலைப்பதிவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்கிறார்கள். நமக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்! பின்னூட்டங்கள் threatening, abusive, objectionable, defamatory, vulgar, racial ஆக இருந்தால் அதற்கு சட்டரீதியான பொறுப்பேற்க வேண்டியது எழுதியவரின் கடமை!
ஆனால், கூகிள் இதனை விரும்பவில்லை! இணையத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளில் வலைப்பூக்களும் ஒன்று. யாரோ செய்யும் தவறுக்குப் பதிவர்களைப் பொறுப்பாக்குவது நியாயமில்லை என்கிறது பிளாக் சேவையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான கூகிள்!
வலைப்பூக்களைச் சேர்த்தது சரியா?
எனது கருத்தில் சரி. இணையம் வழங்கும் அளவற்ற சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துபவர்கள் எத்தனை சதவிகிதம்? கருத்துக்களை விட்டுவிட்டு எழுதியவரைத் தாக்குவது, ஆபாசப் பின்னூட்டங்கள், படங்கள் இவை ஒழிய வேண்டுமென்றால் கட்டுப்பாடு தேவை! அரசாங்கம் விதிப்பதற்குப் பதிலாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டால் இணையத்தில் யாவரும் நலம்!


